இலங்கை
உள்ளூராட்சித் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் வெற்றி உறுதியே!

உள்ளூராட்சித் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் வெற்றி உறுதியே!
ரில்வின் சில்வா நம்பிக்கை
வடக்கு, கிழக்கு மக்களின் மனநிலை மாறாது. ஆதலால், உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியையே அவர்கள் ஆதரிப்பார்கள் என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘பொதுத்தேர்தலின்போது 22 தேர்தல் மாவட்டங்களில் 21 தேர்தல் மாவட்டங்களை நாங்கள் கைப்பற்றினோம். மட்டக்களப்பு மாவட்டத்தை மட்டுமே கைப்பற்ற முடியவில்லை. யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெற்றோம்.
கடந்த பொதுத்தேர்தலின்போது எமக்கு வாக்களித்துவிட்டு, இம்முறை மக்கள் வாக்களிக்காமல் தவிர்க்க எவ்விதக் காரணமும் இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறோம். எனவே, பொதுத்தேர்தலின்போது எமக்கு வாக்களிக்காதவர்களும் இம்முறை வாக்களிப்பார்கள். சிறப்பான அணியைக் களமிறக்கியுள்ளோம்.
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்துச் சபைகளுக்கும் நாம் போட்டியிட முடியாத சூழ்நிலை இருந்தது. இம்முறை அனைத்துச் சபைகளுக்கும் போட்டியிடுகிறோம். இதுகூட ஆரம்பக்கட்ட வெற்றியே- என்றார்.