Connect with us

உலகம்

தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 30 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

Published

on

Loading

தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 30 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 28/03/2025 | Edited on 28/03/2025

 

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று (28.03.2025) மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் ஆகிய பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி காலை 11:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது. நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் வெளியேறி வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக வெளியான முதற்கட்ட தகவலின் படி மியான்மரின் மாண்டலே நகரில் 20 பேரும், டாங்கூ நகரில் 5 பேரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காங் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. புதியதாகக் கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தில் இருந்த 43 தொலிளார்களின் நிலை என்ன? என்பது பற்றிய விவரம் ஏதும் அரியப்படாததால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதோடு ஏராளமான வழிப்பாட்டுத் தலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

Advertisement

மீட்புப் பணி குறித்து விவாதிக்கத் தாய்லாந்து பிரதமர் சினா வர்த்ரா அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதே சமயம் பாங்காங்கில் அவசர நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வு நாடு முழுவதும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் தடுப்புத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டெர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. வியட்நாம், மலேசியா, வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 30 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

  • பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர்!

  • “தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை” – டிடிவி தினகரன் கண்டனம்

  • இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மதமாற்றம் செய்ய வற்புறுத்திய நபர்!

  • “இருக்கக்கூடிய பெயரையும் கெடுப்பதற்குத் துணை போகாதீர்கள்” – முதல்வர் வேண்டுகோள்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன