Connect with us

இலங்கை

ஏழாம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் ; விசாரணைகள் ஆரம்பம்

Published

on

Loading

ஏழாம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் ; விசாரணைகள் ஆரம்பம்

நேற்று (01)  காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

 இந்த மாணவன் சுகாதாரமும் உடற்கல்வியும் கற்கையின் பாடப்புத்தகத்தை பாடசாலைக்கு நேற்றைய தினம் கொண்டு செல்ல மறந்துள்ளார்.

இதனால் அந்த பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் இந்த மாணவனை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன