Connect with us

இலங்கை

ரொஷான் ரணசிங்கவின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

Published

on

Loading

ரொஷான் ரணசிங்கவின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் மனைவி தினுஷா ரணசிங்கவிடம் வலான ஊழல் ஒழிப்பு பிரிவு இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

போலியாகப் பதிவு செய்யப்பட்ட பாரவூர்தி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கமைய, தினுஷா ரணசிங்கவிடம் இன்று சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே போலியாக பதிவு செய்யப்பட்ட பாரவூர்தியை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன