இலங்கை
தந்தை – மகன் கொலை; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

தந்தை – மகன் கொலை; நீதிமன்றம் விடுத்த உத்தரவு
அநுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நொச்சியாகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (15) நொச்சியாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 27 மற்றும் 23 வயதுடைய இரண்டு சகோதரர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தையும் 26 வயதுடைய மகனும் கடந்த 12 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் இராஜாங்கனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.