இலங்கை
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 5 வருடங்களுள் சர்வதேச கிரிக்கெட் போட்டி

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 5 வருடங்களுள் சர்வதேச கிரிக்கெட் போட்டி
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து, அந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றையும் நடத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கைக் கிரிக்கெட் அணியில் அனைத்து இனங்களையும் சேர்ந்த வீரர்களையும் உள்வாங்கிச் செயற்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை விரைவில் அமைக்கவுள்ளோம். எங்களின் ஆட்சிக்காலத்துக்குள் அந்த மாதனத்தில், சர்வதேச கிரிக்கெட் ஆட்டமொன்றையும் நாங்கள் நடத்துவோம் – என்றார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூரிய கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து சர்வதேச மைதானத்தை அமைப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.