இலங்கை
மின்னல் தாக்கி தாய் பலி ; நிர்க்கதியான நான்கு பிள்ளைகள்

மின்னல் தாக்கி தாய் பலி ; நிர்க்கதியான நான்கு பிள்ளைகள்
மின்னல் தாக்கி நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் (வயது 38) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், மொனராகலை குடா ஓயா பொலிஸ் பிரிவின் மகாயாய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தாய் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் மழை பெய்யும் நேரத்தில் மாலை 5 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
இதன் போது மின்னல் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.