Connect with us

இலங்கை

15 நாட்களில் புதிய போப்; வெள்ளை புகை புதியவர் வரவை அறிவிக்கும்

Published

on

Loading

15 நாட்களில் புதிய போப்; வெள்ளை புகை புதியவர் வரவை அறிவிக்கும்

 பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் இன்று காலமான நிலையில் 15 நாட்களில் புதிய போப் தெரிவு செய்யப்படுவார் என கூறப்படுகின்றது.

பொதுவாக போப் ஆண்டவர் ஒருவர் இறந்தாலோ, புதிய போப் ஆண்டவர் நியமிக்கப்பட இருந்தாலோ ரகசிய தேர்தல் செயல்முறை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

Advertisement

அதாவது போப் ஆண்டவர் பதவி காலியானது முதல் 15-20 நாட்களுக்குள், 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் உலகம் முழுவதிலுமிருந்து வந்து, வாரிசைத் தீர்மானிப்பதற்கான ரகசியத் தேர்தல் செயல்முறையான போப்பாண்டவர் மாநாட்டில் பங்கேற்பார்கள்.

70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட கார்டினல்கள் உள்ளனர், ஆனால் சுமார் 120 பேர் மட்டுமே கார்டினல் வாக்காளர்கள்.

வத்திக்கானில் நடைபெறும் தேர்தலின்போது, ஒரு வேட்பாளர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வரை பல சுற்றுகளில் வாக்களிப்பார்கள்.

Advertisement

போப் ஒருவரைத் தேர்ந்தெடுக்காத ஒவ்வொரு சுற்று வாக்களிப்புக்கும், தேவாலயத்திலிருந்து கருப்பு புகை வெளியேறும்.

அதேசமயம் வெள்ளை புகை வெளியேறும் பட்சத்தில் அது புதிய போப்பின் தேர்வை குறிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன