Connect with us

இலங்கை

சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

Published

on

Loading

சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து இன்று (22) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை, கதிர்காமம், சித்துல்பவ்வ வீதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

சடலமாக மீட்கப்பட்டவர் சுற்றுலா விடுதியில் பணியாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

சுற்றுலா விடுதியின் உரிமையாளர் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

அதேவேளை மீட்கப்பட்ட சடலத்தில் பல வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும்,
இது கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகைளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன