Connect with us

தொழில்நுட்பம்

விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ சாதனை: இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்

Published

on

second-docking

Loading

விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ சாதனை: இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்

இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கொண்டுள்ளது. மேலும், விண்வெளியில் தனக்கென சொந்தமாக பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் (பி.ஏ.எஸ்.) எனப்படும் விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டு உள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வருகிற 2035-ம் ஆண்டுக்குள் இதை விண்வெளியில் நிறுவ பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான விண்கலங்கள் 2028 முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – ஸ்பேஸ் டாகிங் எக்ஸ்பிரிமென்ட்) எனும் நுட்பத்தின் கீழ் விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் ஆகிய பரிசோதனைகளில் வெற்றி பெறுவது அவசியமாகும்.இதற்காக இஸ்ரோ, கடந்த டிசம்பர் 30-ந் தேதி 2 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியது. பின்னர் அவற்றின் சுற்றுவட்டப்பாதை இடைவெளிகளை சிறிது சிறிதாக குறைத்து ஜனவரி 16-ந் தேதி 2 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன்மூலம் ‘விண்வெளி டாக்கிங்’ தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு எனும் பெருமையை பெற்று இந்தியா சாதனை படைத்தது. பின்னர் மார்ச் 13-ந் தேதி இந்த இரட்டை செயற்கைக்கோள்கள் மீண்டும் பிரிக்கப்பட்டு சோதனை நடந்தது.இந்நிலையில், இஸ்ரோ நிறுவனம், நேற்று 2-வது முறையாக ஸ்பேடாக்கிங் முறையில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில், “இஸ்ரோ 2-வது ஸ்பேடாக்கிங் முறையில் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக இணைத்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறி உள்ளார். இதன்மூலம் இந்த சாதனையை அடைந்த உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன