Connect with us

இலங்கை

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை ஆபத்தான பொருட்கள் ; மடக்கி பிடித்த இந்திய பொலிஸார்

Published

on

Loading

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை ஆபத்தான பொருட்கள் ; மடக்கி பிடித்த இந்திய பொலிஸார்

இந்தியாவின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 176 கிலோ கஞ்சா பொதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைதாகியுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் வேதாளை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக, சென்னை மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் (9) இரவு மண்டபமருகே வேதாளை கடலோர பகுதியை பொலிஸார் கண்காணிக்க தொடங்கினர்.

Advertisement

இதன்போது இடையர்வலசை கிராமத்தில் நள்ளிரவு ஒரு கும்பல் கடத்தல் பொருட்களை கடத்த தயார் நிலையில் இருந்தபோது பொலிஸார் அவர்களை விரட்டிச் சென்று 3 பேரை பிடித்தனர்.

இதேவேளை பிடிபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொதியை சோதனை செய்தபோது, 176 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன