இலங்கை
நிறுத்தப்படவுள்ள 24 மணிநேர கடவுச் சீட்டு விநியோக சேவை

நிறுத்தப்படவுள்ள 24 மணிநேர கடவுச் சீட்டு விநியோக சேவை
24 மணித்தியால கடவுச்சீட்டு சேவை அடுத்த மாதத்துடன் நிறுத்தப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் அடுத்த மாதம் கடவுச்சீட்டு சேவை இயல்புநிலைக்கு திரும்பிவிடும். அதனால் 24 மணித்தியால சேவை அவசியமற்றதொன்றாகிவிடும்.
வழமை போல் 8 மணித்தியால சேவையே நடைபெறும். ஆயினும் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படுவதைப்பொறுத்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இலத்திரனியல் கடவுச்சீட்டைக் கொள்வனவு செய்வதில் எதுவித தடங்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.