Connect with us

இலங்கை

நுவரெலியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய உறுதி

Published

on

Loading

நுவரெலியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய உறுதி

இன்று (11) காலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து மற்றும் நேற்று (10) வெலிமடையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், ரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகாப்டர்களையும் விமானப்படை தயார் செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு பெல் 412 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.  

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன