Connect with us

இந்தியா

இந்தியாவையும் இந்திய குடிமக்களையும் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் – மோடி!

Published

on

Loading

இந்தியாவையும் இந்திய குடிமக்களையும் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் – மோடி!

26 உயிர்களைக் கொன்ற பஹேல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மீதான இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” வெறும் ஒரு நடவடிக்கை அல்ல என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இது வெறும் ஒரு நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான அடிப்படை மாற்றம் மற்றும் கொள்கையும் கூட என்று இந்தியப் பிரதமர் கூறினார்.

Advertisement

இந்தியப் பிரதமர் நேற்று (12) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட  அவர், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் தற்போதைக்கு நிறுத்தப்பட்டிருந்தாலும், வரும் நாட்களில் பாகிஸ்தான் என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பதை இந்தியா கண்காணிக்கும் என்று கூறிய இந்தியப் பிரதமர், இந்திய ஆயுதப்படைகள் உட்பட அனைத்து பாதுகாப்புப் படைகளும் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாகவும் கூறினார்.

சிந்தூர் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு விடைபெற பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் வந்ததை உலகம் கண்டதாகவும், இது பாகிஸ்தானின் இருண்ட பக்கத்தை உலகிற்குக் காட்டியது என்றும், அரசு ஆதரவு பயங்கரவாதத்திற்கு இது வலுவான சான்றாகும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

Advertisement

 அதன்படி, எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் இந்தியாவையும் இந்திய குடிமக்களையும் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் கூறினார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1746915357.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன