இலங்கை
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத தன்சல்கள் இடைநிறுத்தம்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத தன்சல்கள் இடைநிறுத்தம்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மேலும் 17 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அதன் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
இன்று நடைபெறும் தன்சல்கள் தொடர்பிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.