இலங்கை
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
யாழ்.பல்கலைக்கழக வவுனியா கலைப்பீடமாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால்நிலையத்துக்கு முன்பாக நேற்று இடம்பெற்றது.
தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறி தமிழ்மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் , வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டை குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக பங்கேற்று கஞ்சி அருந்தினர்.