இலங்கை
குப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய துப்பாக்கி

குப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய துப்பாக்கி
திருடப்பட்ட ரஷ்யா தயாரிப்பிலான துப்பாக்கியொன்றை பதுக்கை, வட்டரேகா பகுதியில் குப்பைக் குவியலுக்கு அடியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு, பதுக்கை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இந்த உரிமம் பெற்ற துப்பாக்கியையும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாயையும் திருடிச் சென்றதாக பதுக்கை பொலிஸாருக்கு புகார் கிடைத்திருந்தது.
இந்நிலையில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.