Connect with us

இலங்கை

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு

Published

on

Loading

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, கீழ்க்காணும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

• 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் 2025.07.01 தொடக்கம் 2025.12.31 வரையான காலப்பகுதியில் திறக்கப்படுகின்ற நிலையான வைப்புக்களுக்கு குறித்த உத்தேசத்திட்டம் அமுல்படுத்தப்படும்.

• நிலையான வைப்புக் காலம் 12 மாதங்கள் (ஓராண்டு) ஆவதுடன், உயர்ந்தபட்ச வைப்புப் பெறுமதி ஒரு மில்லியன் ரூபாய்களாகும்.

• சராசரி நிறையிடப்பட்ட நிலையான வைப்பு வட்டி வீதத்திற்கு (AWFDR) மேலதிகமாக வருடாந்த வட்டி வீதம் 3% இனைச் சேர்த்துக் கிடைக்கின்ற பெறுமதி அல்லது குறித்த வங்கியால் வெளியிடப்படும் நிலையான வைப்பு வட்டி வீதத்துடன் 3% வீதத்தை சேர்த்துக்

Advertisement

கிடைக்கின்ற பெறுமதி அல்லது இரண்டில் அதிகமுள்ள வட்டி வீதத்தை செலுத்துதல்.

• ஒட்டுமொத்த நிகழ்ச்சித்திட்டத்திற்னு வட்டிச் சலுகையைச் செலுத்துவதற்காக 30 பில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன