Connect with us

இலங்கை

குழந்தை பராமரிப்பு பெண்களுக்கானது மட்டுமல்ல! பிரதமர்

Published

on

Loading

குழந்தை பராமரிப்பு பெண்களுக்கானது மட்டுமல்ல! பிரதமர்

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல்” என்ற தலைப்பின் கீழ் கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Advertisement

 அவர் மேலும் தெரிவிக்கையில், 

 குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக கருதாமல் பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியம். அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயம் . 

 சிறுவர் பராமரிப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு அதிகமாக நாட்டின் பொருளாதாரத்துடன் இணைவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி அவர்களுக்கு தொழிலாளர் படையில் உயர்ந்த முன்னேற்றம் கிடைக்கும் வழியை பெற்றுக்கொடுக்க வேண்டும். 

Advertisement

 சம்பளம் பெற்றாலும் அல்லது பெறாவிட்டாலும் தனது உழைப்பை வழங்கும் பெண் பொருளாதாரத்தின் மையமான காரணியாகும். 

 ஆனால், சமூக ரீதியாக அவருக்கு உள்ள பல்வேறு தடைகளை எதிர்கொண்டு பெண்களுக்கு தொழிலாளர் படையுடன் இணைவதற்கு உள்ள வாய்ப்பு பெரிதும் வரையறுக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களின் படி 32% ஆக உள்ள நமது நாட்டின் பெண் தொழிலாளர் படை பங்களிப்பு உள்ளது.- என்றார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1749803680.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன