Connect with us

சினிமா

13 வயதில் சினிமாப்பயணம்!! காதல் தோல்வியா 22 வயதில் தற்கொலை செய்து கொண்ட ரஜினி, கமல் பட நடிகை..

Published

on

Loading

13 வயதில் சினிமாப்பயணம்!! காதல் தோல்வியா 22 வயதில் தற்கொலை செய்து கொண்ட ரஜினி, கமல் பட நடிகை..

சினிமாத்துறையில் தன்னுடைய திறமையால் மிகப்பெரிய இடத்தை பெற்ற கலைஞர்கள் இறப்பிற்கு பின்பும் கொண்டாடப்படுவார்கள். அப்படிப்பட்ட பெருமைக்குறிய இடத்தினை பிடித்து, படாபட் ஜெயலட்சுமி என்று பெயர் பெற்றவர்தான் நடிகை ஜெயலட்சுமி.13 வயதில் நடிக்க ஆரம்பித்தவர் தெலுங்கில் இட்டரு அம்மாயிலு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அர்ததயாத்ரா என்ற மலையாள படத்தில் நடித்தார். இதனைதொடர்ந்து பாலசந்தர் இயக்கதில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.அவர் நடித்த படாபட் ரோல் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, அவர் எனக்கே சொந்தம், வருவான் வடிவேலன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தென்னிந்திய சினிமா மொழிகளில் 66 படங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் ஜெயலட்சுமி.இப்படியொரு சூழல் இருக்கும் நிலையில் காதல் தோல்வியால் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு 1980ல் அவரது 22வது வயதில் தற்கொலை செய்து மரணமடைந்தார்.ரஜினிக்கு தங்கையாக நடித்த நடிகை ஷோபா 1980 மே 1 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அதே வருடம் நவம்பர் 1 ஆம் தேதி, ரஜினிக்கு ஜோடியாக நடித்த படாபட் ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.2018ல் ரஜினிக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டபோது, படாபட் ஜெயலட்சுமி தான் என்று பதிலளித்திருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன