உலகம்
வீட்டு சிறையில் உள்ள ஆங் சான் சூகியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஆதரவாளர்கள்

வீட்டு சிறையில் உள்ள ஆங் சான் சூகியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஆதரவாளர்கள்
மியான்மரில் 2021ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு சிறையில் உள்ள அவரது 80-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதனை கோலாகலமாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.
எனவே அவரை கவுரவிக்கும் விதமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழ்த்து வீடியோக்கள் அவரது ஆதரவாளர்களால் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டன.
இது கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் ஆகும். அதேபோல் ஆங் சான் சூகியை சிறையில் அடைத்த ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை