Connect with us

இலங்கை

வாகன இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் தொடர்பில் வெளியான தகவல்

Published

on

Loading

வாகன இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் தொடர்பில் வெளியான தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 163 பில்லியன் ரூபாய் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட இலங்கை சுங்கத்தின்  மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட இதனை தெரிவித்துள்ளார். 

Advertisement

மேலும் கருத்து தெரிவித்த  அவர்,

இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை தாண்டி செல்லும் திறன் சுங்கத்திற்கு இருப்பதாகக் கூறினார்.

“2025 ஆம் ஆண்டில் நாங்கள் பெற்ற வருவாய் இலக்கு  2,115 பில்லியன் ரூபாய் கடந்த ஆண்டு, எங்கள் வருவாய் இலக்கு  1,533 பில்லியன் ரூபாயாக இருந்தது.

Advertisement

கடந்த ஆண்டு, நாங்கள் அந்த இலக்கை தாண்டி 1,535 பில்லியன் வருவாய் ஈட்டினோம்.

அதேநேரம் இந்த ஆண்டும், ஜூன் மாத நடுப்பகுதியில், நாங்கள் 900 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளோம்.

வாகனங்களைப் பொறுத்தவரை, 2025 பெப்ரவரி 1, முதல் வாகன இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தது.

Advertisement

இதுவரை, சுமார் 14,000 வாகனங்கள இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

நாங்கள் சுமார் 165 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளோம். இந்த ஆண்டு, வாகன இறக்குமதியிலிருந்து  450 பில்லியன் ரூபாய் எதிர்பார்க்கிறோம்.” என குறிப்பிட்டார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன