Connect with us

இலங்கை

தமிழர் பகுதியொன்றில் இரவில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் ; சந்தேகத்தில் மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

Published

on

Loading

தமிழர் பகுதியொன்றில் இரவில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் ; சந்தேகத்தில் மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு இளைஞர்களை நேற்று (20) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய பிரதான வீதி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இரு இளைஞர்கள் நடமாடியுள்ளனர்.

Advertisement

இதனை அவதானித்த பொதுமக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மிளகாய்த்தூள், கையுறை, முககவசம் ஆகிய பொருட்களை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

கைதான இருவர் தொடர்பாகாவும் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன