Connect with us

இலங்கை

இளைஞன் செய்த கொடூரம் ; வெட்டிக் கொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி

Published

on

Loading

இளைஞன் செய்த கொடூரம் ; வெட்டிக் கொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி

இரத்தினபுரியில் கிரிஎல்ல – மெத கலதுர பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை வெட்டிக் கொலை செய்து, 25 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவன் கிரிஎல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இரத்தினபுரி நகரத்தைச் சேர்ந்த 63 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் இரத்தினபுரி, நிவித்திகல , உடகரவிட பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வனப்பகுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன