இலங்கை
கிணற்றில் பெண்ணின் சடலம்!

கிணற்றில் பெண்ணின் சடலம்!
வசாவிளானில் தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து குடும்பப்பெண் ஒருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுதந்திரபுரத்தைச் சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்ற குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு உணவருந்தி விட்டு உறக்கத்துக்குச் சென்ற இவரைக் காலையில் காணவில்லை என்றும், அவரைத் தேடிய போது கிணற்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டன.