Connect with us

இலங்கை

சாவகச்சேரி பிரதேசசபை சைக்கிள் வசமாக வாய்ப்பு!

Published

on

Loading

சாவகச்சேரி பிரதேசசபை சைக்கிள் வசமாக வாய்ப்பு!

சாவகச்சேரி பிரதேசசபைக் கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசியப்பேரவை சபையின் ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

சாவகச்சேரி பிரதேசசபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 28 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி பிரதேசசபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 உறுப்பினர்களையும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும், தேசியமக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 5 உறுப்பினர்களையும், ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.

Advertisement

இந்தப் பிரதேசசபையில் அகில இலங் கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகதமிழ்த் தேசியக் கூட்டணி இணைந்து ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன