Connect with us

இலங்கை

காலையில் வெறும் வயிற்றில் சங்குப்பூ டீ குடித்தால் இத்தனை நன்மைகளா?

Published

on

Loading

காலையில் வெறும் வயிற்றில் சங்குப்பூ டீ குடித்தால் இத்தனை நன்மைகளா?

சங்குப்பூ ஒருகாலத்தில் பூஜைக்கு மட்டும் பயன்படுவது என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

அதிலிருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். இந்த சங்குப்பூவில் அவ்வாறு என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றது என நாம் இங்கு பார்ப்போம். 

Advertisement

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆவாரம்பூ எப்படி அற்புத மருந்தாக இருக்கிறதோ அதேபோலத்தான் இந்த சங்குப்பூவும்.

இதில் உள்ள கிளிட்டோரியா டெர்னேட்டியா என்னும் மூலக்கூறு விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்ட போது, உணவுக்குப் பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்திருக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் இதை எடுத்துக் கொள்ளும்போது அடுத்து காலை உணவு எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகிறது. 

Advertisement

சங்குப்பூவிற்கு அபராஜித மலர் என்றும் ஒரு பெயருண்டு. இது பாரம்பரிய மருத்துவ முறைகளில் கண் நோய்களுக்கு மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் இந்த பூவிற்கு கண் பார்வையை மேம்படுத்தும் திறனும் கண் நரம்புகளை வலுப்படுத்தும் திறன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கண்களில் உள்ள நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கண் பார்வைத் திறனை அதிகரிக்க இது உதவி செய்யும்.

Advertisement

எங்கு பார்த்தாலும் டீடாக்ஸ் என்கிற வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் சித்த மருத்துவத்தில் எந்த நோய்க்கு மருத்துவம் செய்யும் முன்பும் உடல் சுத்தி செய்வது வழக்கம்.

அதுபோன்று உடலை டீடாக்ஸ் செய்ய சில கடுமையான வழிகள் இருக்கின்றன. ஆனால் இந்த சங்குப்பூ டீயை வெறும் வயிற்றில் குடிக்கும்போது அதுவே உடலில் கழிவுகள் சேர விடாமல் டீடாக்ஸ் செய்யும் வேலையைச் செய்கிறது.

எங்கு பார்த்தாலும் stress. சின்ன குழந்தைகள் கூட நான் ரொம்ப ஸ்டிரஸ்ஸா இருக்கேன் என்று சொல்லுகிற அளவுக்கு நமக்கு அழுத்தங்கள் அதிகரித்து விட்டன.

Advertisement

இந்த மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசோல் ஹார்மோனைக் குறைக்கும் வேலையை இந்த சங்குப்பூ டீ செய்யும்.

சங்குப்பூவை பிரெயின் பவர் ஃபுட் என்னும் மூளைக்கு அமிர்தம் என்று கூட சொல்லப்படுகிறது.

தினமும் காலை எழுந்ததும் இந்த டீயை குடித்து வந்தால் மூளை நன்கு புத்துணர்ச்சி அடையும். நாள் முழுக்க மூளை சுறுசுறுப்பாக இருக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன