இலங்கை
கிளிநொச்சி விபத்து; இரண்டாவது நபரும் நேற்று உயிரிழப்பு!

கிளிநொச்சி விபத்து; இரண்டாவது நபரும் நேற்று உயிரிழப்பு!
கிளிநொச்சி 155ஆம் கட்டைப்பகுதியில் கடந்த 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பாரவூர்தியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்.
விநாயகபுரத்தைச் சேர்ந்த சின்னராசா பிரதீபன் (வயது-34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.