இலங்கை
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமைச்சர்!

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமைச்சர்!
செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர் .
மதியம் 1 மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்டதிடலுக்கு சென்றனர் . இதன் பொழுது போராட்டகாரர்களால் யாழ். மாவட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டதுடன் அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து விரைவாக குறித்த இடத்தை விட்டு சந்திரசேகரன் வெளியேறினார் .
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்தத்தி காத்திருந்த நிலையில் அவரையும் சூழ்ந்து கொண்டோர் அவரையும் விரட்டியடித்தனர் .