Connect with us

இலங்கை

வலி. வடக்குக் காணிகளை உடன் விடுவிக்கவேண்டும்; காணி உறுதிகளுடன் மக்கள் போராட்டம்

Published

on

Loading

வலி. வடக்குக் காணிகளை உடன் விடுவிக்கவேண்டும்; காணி உறுதிகளுடன் மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிக்கவேண் டும் என்று வலியுறுத்தி, காணிகளின் உறுதிகளுடன் பொதுமக்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலி. வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி, மயிலிட்டி சந்தியில் கடந்த சனிக்கிழமை முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

போராட்டத்தின் நான்காம் நாளான நேற்று அவர்கள் காணிகளின் உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலிட்டி, பலாலி, அன்ரனிபுரம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், கத்தோலிக்க மதகுருக்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரும், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஐந்தாவது நாளான இன்றும் அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன