இலங்கை
அநுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் மருத்துவமனையில்

அநுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் மருத்துவமனையில்
அனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனையில் சேக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் மேலும் சம்பவம் குறித்து திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.