Connect with us

இலங்கை

தமிழர் பகுதியில் 1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

Published

on

Loading

தமிழர் பகுதியில் 1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்று(26) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா – முனைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த, 25 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

Advertisement

கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக, சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன