இலங்கை
கடற்றொழிலுக்குச் சென்ற மீனவரைக் காணவில்லை!

கடற்றொழிலுக்குச் சென்ற மீனவரைக் காணவில்லை!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில், நேற்று அதிகாலை கட்டுமரத்தில் மீன்பிடிக்குச்சென்ற மீனவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆ. ஆனதாஸ் (வயது-38) என்ற மீனவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை. நேற்று மாலை வரை அந்த மீனவர் அவதானிக்கப்படாத நிலையில், தேடல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.