Connect with us

இலங்கை

பிணி தீர்க்கச் சென்ற குடும்பஸ்தர் சாவு!

Published

on

Loading

பிணி தீர்க்கச் சென்ற குடும்பஸ்தர் சாவு!

குறி சொல்லும் ஆலயம் ஒன்றுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பஸ்தர்உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றை வழங்கியுள்ளார். அதை அருந்தியவர் சிறிது நேரத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார். நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வந்த மருத்துவ உதவியாளர்கள் குடும்பஸ்தர் உயிரிழந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து. பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன