Connect with us

இலங்கை

அரசியல் ஆயுதமாக கச்சதீவு விவகாரம்: சரத் வீரசேகர தெரிவிப்பு!

Published

on

Loading

அரசியல் ஆயுதமாக கச்சதீவு விவகாரம்: சரத் வீரசேகர தெரிவிப்பு!

கச்சதீவு விவகாரத்தை இந்தியத் தரப்பு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். சரத் வீரசேகர தனியார் ஊடகமொன்று நேர்காணல் வழங்கியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது. எந்த வளமும் அற்ற அந்தத் தீவில் ஒரு தேவாலயம் உள்ளது. மீனவர்கள் தமது வலைகளை உலரவைப்பதற்கு அந்தத் தீவைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளைதான் கச்சதீவு விவகாரம் இந்தியாவில் பேசுபொருளாக மாறும். அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே அது தொடர்பில் பேசப்படுகின்றது. இந்தியாவில் இருந்து நாளொன்றுக்கு 800 முதல் 900 வரையான இழுவைப் படகுகள் வருகின்றன. இதன்மூலம் எமது கடல்வளம் நாசமாகி வருகின்றது. பெரும் பொருளாதார இழப்பும் ஏற்படுகின்றது. எனவே, அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன