Connect with us

சினிமா

மாரி செல்வராஜை பாராட்டிய இயக்குநர் ராம்…!ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு..!

Published

on

Loading

மாரி செல்வராஜை பாராட்டிய இயக்குநர் ராம்…!ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு..!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ராம், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், தனது முன்னாள் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜை மனமுவந்து பாராட்டியுள்ளார். இருவருக்கும் இடையிலான கலைத்திறனும், மரியாதையும் நிரம்பிய உறவு, இன்று தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.மேலும் 2024 இல் வெளியாகிய மாரி செல்வராஜின் புதிய திரைப்படமான “வாழை”, பாராட்டுகளையும் விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பையும் பெற்றது. மனிதனின் உள் மனக்கசப்பு, சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் உயிரின் பயணத்தைக் கூறும் இந்த படம், தமிழ்த் திரையுலகில் தனித்தன்மை கொண்ட படைப்பாக அமைந்தது. இந்த வெற்றிக்கு பின் நடைபெற்ற விழாவில் இயக்குநர் ராம் உரையாற்றும் போது, தனது மாணவனின் சாதனை குறித்து மிகுந்த உணர்வோடு பேசினார்.மேலும் அவர் கூறும் போது  இயக்குநர் ராம், “மாரி செல்வராஜின் வெற்றி எங்கள் வீட்டின் வெற்றி” என்ற வரிகளில் ஆரம்பித்து, அதை தொடர்ந்து, “இந்த வெற்றி பத்தாது. அவர் இன்னும் பல படங்களை இயக்க வேண்டும். அவரிடம் உள்ள கதைகள் பார்த்தால், பான் இந்திய இயக்குநராக வருவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளதுதான்  என கூறினார்.இயக்குநர் ராம், தனது முன்னாள் உதவியாளரான மாரி செல்வராஜின் வெற்றியை, தனக்கே நிகழ்ந்த வெற்றியாகக் கொண்டாடும் விதம், ஒரு கலைஞனின் உயர்ந்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தோன்றும் புதிய இயக்குநர்களுக்கான வழிகாட்டியாகும் இந்த உறவு, எதிர்காலத்தில் மேலும் பல பிரம்மாண்ட படைப்புகளை நாம் எதிர்பார்க்க வைக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன