Connect with us

இலங்கை

இந்தியாவுக்கு தப்பியோடிய முல்லைத்தீவு நபர் உட்பட மூவர் நாடுகடத்தல்!

Published

on

Loading

இந்தியாவுக்கு தப்பியோடிய முல்லைத்தீவு நபர் உட்பட மூவர் நாடுகடத்தல்!

இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்குள் புகுந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரையும் இந்தியா உடனடியாகவே நாடு கடத்தியுள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் தமிழகத்துக்குச் சென்றனர்.

Advertisement

மன்னார் – பேசாலையில் இருந்து படகு மூலம் மூன்று நபர்கள் இந்தியாவின் மணல்தீடையில் தஞ்சம் அடைந்ததாக தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்டனர்.

இதனையடுத்து தமிழகப் பொலிஸார் மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் ஒருவர் முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எனவும், ஏனைய இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எனவும் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் மூவரும் இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதான தகவலும் தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்தது.

Advertisement

இவற்றின் அடிப்படையில் மேற்படி மூவரும் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன