இலங்கை
எமக்கே கச்சதீவு

எமக்கே கச்சதீவு
கச்சதீவென்பது இலங்கைக்குச் சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக் குறித்தும் கச்சதீவு மீளப்பெறக்கூடிய சூழ்நிலை உள்ளதா? எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “கச்சதீவென்பது தற்போது இலங்கைக்குச் சொந்தமான தீவாகும். தென்னிந்திய அரசியலிலேயே கச்சதீவு அரசியல் துரும்பு சீட்டாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.கச்சதீவு இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது. அது எமது மண்ணுக்குச் சொந்தமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார் .