இலங்கை
யாழில் வீதி விளக்கினை பழுது பார்த்தவருக்கு நேர்ந்த கதி!

யாழில் வீதி விளக்கினை பழுது பார்த்தவருக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணத்தில் வீதி விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
மின்சாரம் தாக்கிய நிலையில் ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையை அண்மித்த பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை , வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது.
இதன்போது, மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை