இந்தியா
செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச நீதிவேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!

செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச நீதிவேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயா னத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக் கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனை யாகவும், கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது. இந்தக் கொடிய செயலுக்கு சர்வதேச நீதிமன்றத்திடமே நீதியைப் பெறவேண்டும் என்று தென்னிந்தியப் பிரபல நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்தப் பகுதியானது யுத்த காலப்பகுதியில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகக் கூறப்படுகிறது. அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை. இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளார்கள். இவை அனைத்தும் கொஞ்சம் கூட மனிதாபிமான மற்ற செயல்.
இந்தச் செயல்களைச் செய்தவர்களிடமே நீதியைக் கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச நீதி மன்றத்துக்கே இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்ல வேண்டும். இந்தக் கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். அதற்குத் தமிழர்களாகிய நாங்கள் தான் பாடுபடவேண்டும் – என்றார்.