இலங்கை
நாட்டில் கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

நாட்டில் கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்
நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000ஆம் கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திணைக்களத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் பற்றாக்குறையும் இருப்பதாகக் கூறினார்.
சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) – சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க, மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“36 சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 12,000ஆம் கைதிகளை தடுத்து வைக்க முடியும்.
எனினும் தற்போது, அவற்றில் 33,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, எங்கள் பணி மிகவும் பெரியது.
மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்கள்.
சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும், இல்லையெனில் இந்த நாடு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும்.
சிறைச்சாலை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள்.
ஒரு சிலரால் செய்யப்பட்ட சில தவறுகள் நம்பிக்கையை சேதப்படுத்தியிருக்கலாம்.
இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன.
மெகசின் சிறைச்சாலைக்கு மேல் தொலைபேசிகள் வீசப்படுகின்றன.
எமது அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சிறைச்சாலை ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் உள்ளது.
தொலைபேசிகள் குறைவாகவே உள்ளன. தற்போது முடிந்தவரை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.