Connect with us

இலங்கை

பரிதாபமாக பறிபோன மூன்று உயிர்கள் !

Published

on

Loading

பரிதாபமாக பறிபோன மூன்று உயிர்கள் !

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (21) கஹவத்தை வென்னப்புவ மற்றும் திருக்கோவில் பொலிஸ் பிரிவுகளில் குறித்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

 பெல்மடுல்ல – நோனாகம வீதியில் வெல்லதுர பிரதேசத்தில் மழையுடன் கூடிய வானிலை காரணமாக மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி முன்னால் சென்ற சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போதுஇ  59 வயதுடைய பலாங்கொடைஇ சந்துங்கம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளைஇ சிலாபம் – கொழும்பு வீதியின் கொலிஞ்சாடிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் லொறி ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரேரா மாவத்தைஇ வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேருடன் அக்கரைப்பற்றுவில் இருந்து பொத்துவில் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் இடது பக்கம் கவிழந்து முகத்துவாரம் பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

விபத்தின் பின்னர் சாரதியும்இ பின்னால் பயணித்த இருவரும் படுகாயமடைந்து திருக்கோவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சாரதி மற்றும் பின்னால் பயணித்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார். விநாயகபுரம் 03 இல் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன