Connect with us

இலங்கை

புதையல் தோண்டியவர் கைது!

Published

on

Loading

புதையல் தோண்டியவர் கைது!

குருணாகல், மெல்சிறிபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெவனதென்ன பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மெல்சிறிபுர பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருணாகல், மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், 4 ஜெலட்நைட் குச்சிகள், 6 டெட்டனேட்டர் மற்றும் இரசாயனப் பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன