Connect with us

இலங்கை

தடயப்பொருள்களிடையே நெருக்கமான தொடர்புகள்!

Published

on

Loading

தடயப்பொருள்களிடையே நெருக்கமான தொடர்புகள்!

செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சில தடயப்பொருள்களுக்கு இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன என்று, நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நீலநிறப் பையுடன் மீட்கப்பட்ட ‘எஸ்-25’ என அடையாளமிடப்பட்ட மனித என்புத் தொகுதியுடன் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களுக்கும், ‘எஸ்-48’, ‘எஸ்-56’ என அடையாளமிடப்பட்ட மனித என்புத் தொகுதிகளுடன் மீட்கப்பட்ட சான்றுப் பொருள்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன. எனவே, ‘எஸ்-48’, ‘எஸ்-56’ என அடையாளமிடப்பட்ட மனித என்புத் தொகுதிகள் தொடர்பிலும் விரிவான கூராய்வுகளை மேற்கொள்ளவேண்டும். மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் சீருடைகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன