இலங்கை
முச்சக்கர வண்டி சாரதியிடம் பொலிஸ் அதிகாரி செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்

முச்சக்கர வண்டி சாரதியிடம் பொலிஸ் அதிகாரி செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்
முச்சக்கர வண்டி சாரதியொருவரிடம் 3,000 ரூபாவினை கையூட்டலாக பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த குறித்த கான்ஸ்டபிள், கைது நடவடிக்கையையடுத்து பணியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கையின்போது, போக்குவரத்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை திருப்பித் தருவதற்காக குறித்த கான்ஸ்டபிள் கையூட்டலை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.