இலங்கை
ரூ.42 கோடி வென்றவருக்கு காசோலை வழங்கிவைப்பு!

ரூ.42 கோடி வென்றவருக்கு காசோலை வழங்கிவைப்பு!
இலங்கையில் அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு வரலாற்றில் மிகப்பெரும் பரிசுத் தொகையை வென்றவருக்கு, அதற்கான காசோலை நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதிய ‘மெகா பவர்’ சீட்டிழுப்பின்போது ரூ. 474,599,422 (47 கோடி 45 இலட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா) பரிசுத்தொகையை ஒருவர் வென்றிருந்தார். அவருக்கே, தேசிய லொத்தர் சபையின் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில் பரிசுக்காசோலை வழங்கிவைக்கப்பட்டது.