இலங்கை
நீதிமன்றில் சரணடைந்த ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன்!

நீதிமன்றில் சரணடைந்த ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, இன்று (24) மத்துகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஜீப் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த வழக்கில் முன்னதாக கைதுசெய்யப்பட்ட ஜகத் விதானவின் மகன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.