சினிமா
முன்பு திருமணம், குழந்தைகள் தான் என் கனவு, தற்போது.. அதிர்ச்சி கொடுத்த மிருணாள் தாகூர்

முன்பு திருமணம், குழந்தைகள் தான் என் கனவு, தற்போது.. அதிர்ச்சி கொடுத்த மிருணாள் தாகூர்
தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.இந்நிலையில், பட புரமோஷன் நிகழ்ச்சியில் அவரது திருமணம் குறித்து மிருணாள் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” திருமணம் செய்து கொள்வதும், தாயாக மாறுவதும் தனது சிறுவயதிலிருந்தே கனவு. இருப்பினும், தனது முழு கவனமும் தற்போது திரைத்துறை வாழ்க்கையில் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.