இலங்கை
ரயிலில் மோதி பலியான முதியவர் ; விசாரணைகள் ஆரம்பம்

ரயிலில் மோதி பலியான முதியவர் ; விசாரணைகள் ஆரம்பம்
சிலாபம் பொலிஸ் பிரிவின் சவரன பகுதியில் நேற்று (25) மாலை கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிச் செல்லும் ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 70 வயதுடையவர் என அடயாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் சிலாபம் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.