Connect with us

இலங்கை

போதைப்பொருளுடன் கோலாகல கொண்டாட்டம் ; பெண்ணுடன் கைதான குழு

Published

on

Loading

போதைப்பொருளுடன் கோலாகல கொண்டாட்டம் ; பெண்ணுடன் கைதான குழு

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் உள்ள விருந்தகமொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் 21 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த விருந்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

கைதானவர்களில் 20 ஆண்களும் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்போது அதிகாரிகள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

குறித்த விருந்துபசாரம் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள், சட்டவிரோதப் பொருட்கள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு கோரியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன